நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் ராசிபுரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன. உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
The post ராசிபுரம் அருகே ரூ.7 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல்! appeared first on Dinakaran.